search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் ஆண்டனி"

    • 12ம் வகுப்பு படித்து வந்த மீரா கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சையில் இருந்துள்ளார்.
    • திரைப்பிரபலங்கள் பலர் மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 12ம் வகுப்பு படித்து வந்த மீரா கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டார்.

    திரைப்பிரபலங்கள் பலர் மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றன.

    அந்த வீடியோவில், "எனக்கு 7 வயதாக இருக்கும்போது என் அப்பா தற்கொலை செய்து கொண்டார். கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு என் தாய் பட்ட கஷ்டங்களால் அந்த வலி என்னவென்று எனக்கு நன்றாக தெரியும். நிறைய குழந்தைகளும் தற்கொலை எண்ணத்துடன் இருக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் அழுத்தம் கொடுக்கக் கூடாது. மற்றவர்கள் உங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என எதிர்பார்க்காமல் நீங்கள் உங்களை நேசியுங்கள்" என்றார்.

    • நடிகர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்து கொண்டார்.
    • மீராவின் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை, டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவருக்கு மீரா என்ற மகள் உள்ளார். 12-ஆம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    மீராவின் உடல் சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி - பாத்திமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலானது டி.டி.கே சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், திரைப்பிரபலங்கள் பலர் மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், விசாரணையின் போது ஒரு கடிதம் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில்'ஐ லவ்யூ ஆல். மிஸ் யூ ஆல்' என்று எழுதப்பட்டுள்ளது. மேலும், பத்து வரிகள் கொண்ட அந்த கடிதம் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளதாகவும் இந்த கடிதம் மன அழுத்தத்தில் இருந்தபோது எழுதியதா? அல்லது தற்கொலை செய்யும் முன்பு எழுதியதா? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விஜய் ஆண்டனி மகள் மீரா இன்று தற்கொலை செய்துகொண்டார்.
    • இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை, டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். 12-ஆம் வகுப்பு படித்து வந்த இவரது மகள் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    மீராவின் உடல் சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி - பாத்திமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலானது டி.டி.கே சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


    விஜய் ஆண்டனி -மீரா

    இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திரைப்பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், 'லியோ' படக்குழு தங்களது சமூக வலைதளத்தில் மீராவுக்கு இரங்கல் தெரிவித்து இன்று வெளியிடவுள்ள போஸ்டரை நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை செய்துகொண்டார்.
    • அவர் கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை, டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவருக்கு மீரா என்ற மகள் உள்ளார். 12-ஆம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    மீராவின் உடல் சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி - பாத்திமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலானது டி.டி.கே சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

    மீராவின் உடல் இன்று மாலை அல்லது நாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் புதைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு திரைப்பிரபலங்கள் நேரில் ஆறுதல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

    விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை, டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவருக்கு மீரா என்ற மகள் உள்ளார். 12-ஆம் வகுப்பு படித்து வந்த மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


    விஜய் ஆண்டனி - மீரா

    ஆனால், மீராவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீரா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் "இந்த அதிர்ச்சியான செய்தி கேட்டு எழுந்தேன். விஜய் ஆண்டனி சார் மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.


    • 12-ம் வகுப்பு படித்து வந்தவர்
    • மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது

    தமிழ் திரை உலகில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள வீட்டில் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    விஜய் ஆண்டனியின் மூத்த மகள் பெயர் மீரா. 16 வயதாகும் இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகள் லாரா 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    பிளஸ்-2வில் முதல் குரூப் படித்து வந்த மீரா மன அழுத்தத்தில் இருந்து வந்து உள்ளார். இதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. மன அழுத்தத்தை போக்க கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இருப்பினும் மீரா மனஅழுத்தத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மீரா வழக்கம்போல் தூங்கச் சென்றார். இன்று அதிகாலை 3 மணி அளவில் விஜய் ஆண்டனி, மகள் மீராவின் அறையை போய் பார்த்துள்ளார். அங்கு மகள் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.

    பின்னர் வீட்டு வேலைக்காரரின் உதவியுடன் மின்விசிறியில் இருந்து மகளை இறக்கி உடனடியாக ஆழ்வார்பேட்டை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு மீராவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதைக் கேட்டு விஜய் ஆண்டனியும், அவரது குடும்பத்தினரும் அழுது கண்ணீர் வடித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு விரைந்து சென்று மீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மீரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மனஅழுத்தம் காரணமாகவே அவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

    பள்ளியில் பேட்மிட்டன் விளையாட்டை தேர்வு செய்து மீரா விளையாடி வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் மீரா வெளியில் சென்று வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அப்போது அவர் யாரை சந்தித்தார்? எதற்காக போய் பார்த்தார்? என்ன பேசினார். என்பது பற்றிய விவரங்களையும் போலீசார் திரட்டி வருகிறார்கள்.

    மீராவின் மனஅழுத்தத்துக்கு காரணமாக அமைந்த விஷயங்கள் என்னென்ன? என்பது பற்றியும் போலீசார் தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக அவர் பயன்படுத்திய செல்போனை வைத்தும் விசாரித்து வருகிறார்கள். மீரா நேற்று யார்-யாருடன் போனில் பேசினார்? என்பது பற்றிய விவரங்களை சேகரித்து அதன் மூலமாக மன அழுத்தத்துக்கான காரணத்தை கண்டறிய திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த தற்கொலை சம்பவம் தமிழ் திரையுலகில் விஜய் ஆண்டனியின் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு மீராவின் உடல் விஜய் ஆண்டனியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    வைரலான விஜய் ஆண்டனி வீடியோ

    தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி பேசிய பழைய வீடியோக்கள் இன்று வைரலாகி வருகின்றன.

    அதில், 'எனக்கு 7 வயதாக இருக்கும்போது என் அப்பா தற்கொலை செய்து கொண்டார். கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு என் தாய் பட்ட கஷ்டங்களால் அந்த வலி என்னவென்று எனக்கு நன்றாக தெரியும். நிறைய குழந்தைகளும் தற்கொலை எண்ணத்துடன் இருக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் அழுத்தம் கொடுக்கக் கூடாது. மற்றவர்கள் உங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என எதிர்பார்க்காமல் நீங்கள் உங்களை நேசியுங்கள்' என்று கூறி உள்ளார்.

    • யூ டியூப் சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன்.
    • சகோதரர் ஏ.ஆர். ரகுமானையும் தொடர்பு படுத்தி பொய்யான வசந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார்.

    யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    என் மீது அன்பு கொண்ட, என் அன்பு மக்களுக்கு வணக்கம்.

    நான் இப்போது சிறு மன வேதனையுடன், இந்த கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

    ஒரு சகோதரி, யூ டியூப் சேனல் ஒன்றில் என்னையும் சகோதரர் ஏ.ஆர். ரகுமானையும் தொடர்பு படுத்தி பொய்யான வசந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார்.

    அது முற்றிலும் பொய்யே!

    அந்த யூ டியூப் சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன்.

    மான நஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும், நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.
    • இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரத்தம்'.இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


    இந்நிலையில், 'ரத்தம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு நாள்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்றத்தாழ்வு குறித்து உருவாகியுள்ள இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி, பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




    • விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.
    • இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரத்தம்'.இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


    ரத்தம் போஸ்டர்

    இந்நிலையில், 'ரத்தம்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு நாள்' பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி, பாடியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.
    • இப்படம் 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

    இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரத்தம்'.இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது, 'ரத்தம்' திரைப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.


    ரத்தம் போஸ்டர்

    அந்த போஸ்டரில், "சாத்தியமில்லாத எல்லாத்தையும் நீக்கிட்டா மிஞ்சிறது நம்ப முடியாத ஒன்னாருந்தாலும் அதான் உண்மை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


    • இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.
    • இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். இவர் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'ரத்தம்'. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பரபரப்பு காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 'ரத்தம்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.





    • சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.
    • இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.

    நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். இவர் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'ரத்தம்'. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ரத்தம் போஸ்டர்

    இந்நிலையில், 'ரத்தம்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

    ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'இறைவன்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.





    ×